வங்கதேசம்-பாகிஸ்தான் 2-வது டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டம் பாதிப்பு


வங்கதேசம்-பாகிஸ்தான் 2-வது டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டம் பாதிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 8:29 PM GMT (Updated: 4 Dec 2021 8:29 PM GMT)

வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.

டாக்கா,

வங்கதேசம்-பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

பாகிஸ்தானின் தொடக்க வீரர்களான அபித் அலி 39 ரன்னிலும், சாபிக் 25 ரன்னிலும் அவுட்டாகினர். 57 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அசார் அலி 36 ரன்னிலும், கேப்டன் பாபர் அசாம் 60 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

Next Story