தென்ஆப்பிரிக்க 'ஏ' அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு
![தென்ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு தென்ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு](https://img.dailythanthi.com/Articles/2021/Dec/202112070838454884_3rd-Test-against-South-Africa-A-Indian-bolwers-shines_SECVPF.gif)
இந்திய அணி தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்களையும், சவுரப் குமார் 2 விக்கெட்களையும், தீபக் சாகர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
ப்ளூம்போண்டைன் ,
இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா ஏ அணியுடன் விளையாடி வருகிறது . மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி முடிவடைகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஏ அணியின் கேப்டன் பீட்டர் மலன் பேட்டிங்யை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய சரேல் ஏர்வி 75 ரன்கள் குவித்து நவ்தீப் சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் டோனி சோர்சி 58 ரன்களிலும் , காயா சோண்டோ 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா ஏ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்களையும் , சவுரப் குமார் 2 விக்கெட்களையும் , தீபக் சாகர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்குகிறது
Related Tags :
Next Story