இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது மிகச்சிறந்த ஆண்டு - லோகேஷ் ராகுல்


இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது மிகச்சிறந்த ஆண்டு - லோகேஷ் ராகுல்
x
தினத்தந்தி 31 Dec 2021 8:29 AM GMT (Updated: 31 Dec 2021 8:29 AM GMT)

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2021 ஆம் ஆண்டு சிறப்பு வாய்ந்தது என லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.

செஞ்சூரியன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றது. அந்த மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த நிலையில் 2021-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டும் சிறப்பாக அமைந்தது என்று லோகேஷ் ராகுல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணிக்கு  இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டு நாம் பெற்றுள்ள சாதனைகள் உண்மையிலேயே சிறப்பானவை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது மிகச்சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இதற்கு நிறைய கடின உழைப்பு மற்றும் ஒழுக்கம் தேவைப்பட்டது. சில ஆண்டுகளாக நாங்கள் ஒரு அணியாக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். சிறந்த ஓய்வு  அறையும், சிறந்த சூழ்நிலையும், சிறந்த செயல் திறனுக்கு பங்களித்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்த நேரத்தில் ஓய்வு  அறை சூழல் ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு சிறந்த டெஸ்ட் வெற்றி. தொடரின் முதல் ஆட்டத்தில் அணியின் முழு செயல்திறனை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story