இந்தியாவிற்கு எதிரான 2- ஆவது டெஸ்ட்: கருணரத்னே சதம்
இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே சதம் விளாசினார்.
பெங்களூரு,
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது.
ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி 447 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் விளையாடி வருகிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாடி வரும் நிலையில், கேப்டன் கருணரத்னே பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார்.
அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வந்த அவரும் 107 ரன்கள் எடுத்தபோது பும்ரா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். இதனால் இலங்கை அணி தோல்வியில் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.
Related Tags :
Next Story