ஆப்கானிஸ்தான் அசத்தல் பந்து வீச்சு; முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது...!
ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
பல்லக்கலே,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தாம் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிற்று விளையாடி வருகிறது. அத்தொடரின் முதலாவது ஆட்டம் நேற்று பல்லக்கலேவில் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்ப்ராஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரான் ஆகியோர் களம் புகுந்தனர். அபாரமாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் குர்ப்ராஸ் 53 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரஹ்மத்தும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் வேகமாக ஏறியது.
அதில் ரஹ்மத் 52 ரன்கள் அடித்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதற்கிடையில் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரான் சதம் அடித்து அசத்தினார். அவர் 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. இதையடுத்து 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் புகுந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இறங்கினர். இதில் மெண்டிஸ் 1 ரன்னிலும், அடுத்து வந்த சண்டிமால் 14 ரன்னிலும், டி சில்வா 16 ரன்னிலும், அசலங்கா 10 ரன்னிலும், கேப்டன் ஷனகா 16 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து ஆல்ரவுண்டர் ஹசரங்கா களம் புகுந்தார். இறுதியில் அந்த அணி 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக நிசாங்கா 85 ரன்னும், ஹசரங்கா 66 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் ஆணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது