ஐ.பி.எல். தொடர் : சென்னை வந்தடைந்தார் தோனி..


ஐ.பி.எல். தொடர் : சென்னை வந்தடைந்தார் தோனி..
x

நாளை முதல் தோனி பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று சென்னை வந்தடைந்தார்.இது தொடர்பான புகைப்படத்தை சென்னை அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சென்னை அணியின் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் உள்பட சில வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், தோனி இன்று சென்னைக்கு வருகை தந்த நிலையில், நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story