ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு


ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 22 April 2024 1:33 PM GMT (Updated: 22 April 2024 1:35 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ராஜஸ்தான் -மும்பை அணிகள் மோதுகின்றன.

ஜெய்ப்பூர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்சும் மோதுகின்றன.

சரிசம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச உள்ளது.


Next Story