தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் சேர்க்காதது தவறு - முன்னாள் வீரர்கள் கண்டனம்


தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில்  சேர்க்காதது தவறு -  முன்னாள் வீரர்கள் கண்டனம்
x

தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் சேர்க்காதது தவறான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். ஆனால் முதல 2 போட்டியில் மட்டுமே அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. 'சூப்பர் 4' சுற்றின் 2 போட்டியிலும் தினேஷ் கார்த்திக்குக்கு 11 பேர் கொண்ட அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தினேஷ் கார்த்திக் டெத் ஓவர்களில் மிகவும் அற்புதமாக அண்மைய நாட்களாக பேட் செய்து வருகிறார் அவர் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் சேர்க்காதது தவறான முடிவு என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்து கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

முன்னாள் விக்கெட் கீப்பரும், தேர்வு குழு முன்னாள் தலைவருமான கிரண் மோரே கூறியதாவது:-

தினேஷ் கார்த்திக் தன்னை ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்துள்ளார். அவருக்கு வாய்ப்பு வழங்காதது நியாயம் இல்லை. அவரை ஆடும் லெவனில் தேர்வு செய்து இருக்க வேண்டும். அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது தவறான முடிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் கூறுகையில்,

இந்திய கிரிக்கெட் அறிவித்த போது அதை கண்டு நான் பீதி அடைந்தேன். ஆனால் இந்திய அணியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை பார்க்கும் போது அவர்கள் அழுத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. என்னை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் ஆடும் லெவனில் தனது வாய்ப்பை இழந்துள்ளதாகவே பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறும்போது,

'தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் தேர்வு செய்து இருக்க வேண்டும் அவரை அவரது பங்களிப்பில் இடம்பெற செய்ய வேண்டும் என்றார்.


Next Story