வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டம்...இந்திய அணியின் சி்றந்த பீல்டராக ரவீந்திர ஜடேஜா தேர்வு...!


வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டம்...இந்திய அணியின் சி்றந்த பீல்டராக ரவீந்திர ஜடேஜா தேர்வு...!
x

Image Courtesy: @BCCI

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

புனே,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் 4 ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளை வீழ்த்தி 8 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி வங்காளதேசத்திற்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீரருக்கான விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முஷ்பிகுர் ரஹீம் கொடுத்த கேட்ச்சை ஜடேஜா அபாரமாக பிடித்தார். அதனால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் தங்கப்பதக்கத்தை ஜடேஜாவுக்கு அளித்தார்.


Next Story