இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி; இந்திய அணியை பாராட்டிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி; இந்திய அணியை பாராட்டிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 10 March 2024 5:11 AM GMT (Updated: 10 March 2024 5:15 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

தர்மசாலா,

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி படைத்தது. இந்த வெற்றியை கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று 4 -1 என கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இரு தரப்பினரும் சிறப்பாக செயல்பட்டனர்.

இரண்டு இன்னிங்சிலும் அஸ்வினின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோரின் சதங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. நன்றாக முடிந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story