12 வருடங்களாக தொடரும் மோசமான வரலாற்றை மாற்றுமா மும்பை இந்தியன்ஸ்..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு


12 வருடங்களாக தொடரும் மோசமான வரலாற்றை மாற்றுமா மும்பை இந்தியன்ஸ்..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
x

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதுகின்றன.

ஜெய்ப்பூர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி மும்பை ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. ஏனெனில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் இவ்விரு அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலும் ராஜஸ்தானே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை வெற்றி பெற்று 12 வருடங்களாக தொடரும் மோசமான வரலாற்றை மாற்றுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Next Story