பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: தென்கொரியா அரைஇறுதிக்கு தகுதி!
இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்கொரியா.
புனே,
பெண்களுக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மராட்டியத்தில் 3 இடங்களில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணியிலுள்ள 12 வீராங்கனைகளுக்கு கொரோனா ஏற்பட்டதால், இந்திய அணி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் 2023-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் இந்திய அணியின் கனவு கலைந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது தென்கொரியா.
இதன்மூலம், 2023 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு தென்கொரியா தகுதி பெற்றது.
Related Tags :
Next Story