மெர்டேக்கா கால்பந்து தொடர்; அரையிறுதியில் மலேசியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி..!!


மெர்டேக்கா கால்பந்து தொடர்; அரையிறுதியில் மலேசியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி..!!
x

image courtesy; twitter/ @IndianFootball

மெர்டேக்கா கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி மலேசியா உடன் மோத உள்ளது.

கோலாலம்பூர்,

42-வது மெர்டேக்கா கால்பந்து தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் முதலில் மலேசியா, இந்தியா, பாலஸ்தீனம் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய 4 அணிகள் இடம் பெற்றிருந்தன. இதில் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் பாலஸ்தீனம் விலகியது.

பாலஸ்தீனம் கடைசி நேரத்தில் விலகிய நிலையில், மலேசியா கால்பந்து சங்கம், இந்த தொடர் இந்தியா, தஜிகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய மூன்று அணிகளுடன் நாக்-அவுட் முறையில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது.

அதன்படி இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 17ஆம் தேதி அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தஜிகிஸ்தான் அணி உடன் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.


Next Story