சுல்தான் ஆப் ஜோகூர் கோப்பைக்கான இந்திய ஜூனியர் ஆக்கி அணி அறிவிப்பு..!!


சுல்தான் ஆப் ஜோகூர் கோப்பைக்கான இந்திய ஜூனியர் ஆக்கி அணி அறிவிப்பு..!!
x

image courtesy; twitter/ @TheHockeyIndia

தினத்தந்தி 10 Oct 2023 7:55 AM GMT (Updated: 10 Oct 2023 7:59 AM GMT)

சுல்தான் ஆப் ஜோகூர் கோப்பைக்கான 20 வீரர்கள் கொண்ட இந்திய ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர்,

21 வயதுக்கு உட்பட்டோருக்கான 11-வது சுல்தான் ஆப் ஜோகூர் ஆக்கி தொடர் மலேசியாவின் ஜோகூரில் வரும் 27ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

இதில் பங்குபெறும் அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இந்திய அணி 'பி' குழுவில் மலேசியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. 'ஏ' குழுவில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரேட் பிரிட்டன் அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான 20 வீரர்கள் கொண்ட இந்திய ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு உத்தம் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

20 வீரர்கள் கொண்ட இந்திய அணி பின்வருமாறு;-

மொகித் எச்எஸ், ரன்விஜய் சிங் யாதவ், அமன்தீப் லக்ரா, ரோஹித், சுனில் ஜோஜோ, சுக்விந்தர், அமீர் அலி, யோகம்பர் ராவத், விஷ்னுகாந்த் சிங், பூவன்னா சி பி, ரஜிந்தர் சிங், அமந்தீப், சுனித் லக்ரா, அப்துல் அஹத், உத்தம்சிங், அருண் சஹானி, அதித்யா லலகே, அங்கத் பிர் சிங், குர்ஜோத் சிங் மற்றும் சதிஷ் பி.



Next Story