ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; இந்திய அணிக்கு 5-வது இடம்


ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; இந்திய அணிக்கு 5-வது இடம்
x

image courtesy; twitter/@TheHockeyIndia

இந்த தொடரில் இந்திய அணி காலிறுதியில் நெதர்லாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியது.

மஸ்கட்,

முதலாவது ஐவர் ஆண்கள் ஆக்கி உலகக்கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 நாடுகள் பங்கேற்றிருந்த நிலையில், அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றன.

காலிறுதியில் இந்திய அணி நெதர்லாந்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-7 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியை தழுவியது. இதனையடுத்து இந்திய அணி 5-8 இடங்களுக்கான ஆட்டங்களில் விளையாடியது. இதில் இந்திய அணி முதலில் கென்யாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக 5-வது இடத்திற்கான ஆட்டத்தில் எகிப்துடன் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி தரப்பில் மனிந்தர் சிங் 2 கோல்களும், ரஹீல் முகமது, ராஜ்பார் பவன், மோர் மந்தீப் மற்றும் உத்தம் சிங் ஆகியோர் தலா 1 கோலும் அடித்தனர்.


Next Story