சென்னை மாவட்ட ஜூனியர் பெண்கள் கபடி அணி தேர்வு நாளை நடக்கிறது


சென்னை மாவட்ட ஜூனியர் பெண்கள் கபடி அணி தேர்வு நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 25 Oct 2017 9:32 PM GMT (Updated: 25 Oct 2017 9:32 PM GMT)

44–வது மாநில ஜூனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை நடக்கிறது.

சென்னை,

44–வது மாநில ஜூனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் அடுத்த மாதம் (நவம்பர்) 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட ஜூனியர் அணி தேர்வு சென்னை ராணி மேரி கல்லூரி கபடி மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்கள் 20 வயதிற்குள் இருக்க வேண்டும். உடல் எடை 65 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது. விருப்பம் உள்ள வீராங்கனைகள் உரிய வயது சான்றிதழுடன் அணித்தேர்வில் பங்கேற்கலாம் என்று சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கோல்டு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story