இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி கொரோனாவால் பாதிப்பு


இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2020 12:05 AM GMT (Updated: 18 Aug 2020 12:05 AM GMT)

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்பால்,

உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சரிதா தேவி (வயது 38) மற்றும் அவரது கணவர் தோய்பா சிங் ஆகியோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. மணிப்பூரை சேர்ந்த சரிதா தேவியும் அவரது கணவரும் சிகிச்சைக்காக இம்பாலில் உள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Next Story