புரோ கபடி லீக்: பெங்களூரு புல்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
பெங்களூரு,
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 36 - 35 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா அணியை வீழ்த்தி வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 36 - 31 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story