புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து


புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து
x

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனது பயிற்சியாளர் பார்க் டே சாங்வை பிரிந்துள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனது பயிற்சியாளர் பார்க் டே சாங்வை பிரிந்துள்ளார். இதை பயிற்சியாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

2019ம் ஆண்டு சிந்துவுடன் பயிற்சியாளராக இணைந்த பார்க், தொடர்ந்து சிந்துவின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அவரது பயிற்சிக் காலத்தில் சிந்து மூன்று முறை சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார். 2022ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக பி.வி.சிந்துவின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை. அவரது மோசமான பார்மிற்கு பயிற்சியாளர் பார்க் பொறுப்பேற்றதுடன், பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். சிந்து, தற்போது புதிய பயிற்சியாளரை நியமிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story