விவாகரத்து வதந்திக்கு சமந்தா விளக்கம்

விவாகரத்து பற்றிய வதந்திக்கு நடிகை சமந்தா பதில் அளித்து கூறும்போது,

Update: 2021-09-21 13:04 GMT
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் தனது பெயருடன் சேர்த்து வைத்திருந்த நாகசைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்ற பெயரை சமந்தா திடீரென்று நீக்கினார். இதன் மூலம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்றும், விவாகரத்து செய்து பிரியப்போகிறார்கள் என்றும் தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் சமந்தாவிடம் உங்களையும், நாக சைதன்யாவையும் பற்றி பல்வேறு தகவல் பரவி வருவது பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து சமந்தா கூறும்போது, “இதுபற்றி ஏற்கனவே ஆயிரக்கணக்கான பதிவுகள் வந்து விட்டன. இன்னும் வந்துகொண்டே இருக்கிறது. ஏதாவது சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தால் எனக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் சொல்லுவேன். இதற்கு முன்பு வந்த வியாக்கியானங்கள், விவாதங்கள், சந்தேகங்கள் போன்றவற்றுக்கெல்லாம் நான் எப்போதாவது விளக்கம் கொடுத்து இருக்கிறேனா? அல்லது கண்டனம் தெரிவித்து இருக்கிறேனா?” என்றார்.

மேலும் சமந்தா கூறும்போது, “சினிமாவில் நூறு சதவீதம் எனது வேலையை செய்து வருகிறேன். எதையும் என்னால் செய்ய முடியாது என்று நினைத்தது இல்லை. எல்லாம் சிறப்பாக அமைந்தால்தான் ஒரு படம் வெற்றி பெறும். எப்படித்தான் நன்றாக நடித்தாலும், நல்ல இயக்குனரும், கதையும் இல்லாவிட்டால் சிறப்பாக அமையாது. கொரோனா எல்லோரது வாழ்க்கையையும் மாற்றிவிட்டது” என்றார்.

மேலும் செய்திகள்