'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தின் வசனகர்த்தா ராசீ.தங்கதுரை காலமானார்- திரைத்துறையினர் இரங்கல்

ராசீ.தங்கதுரை உடல்நலக்குறைவு காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காலமானார்.

Update: 2023-11-14 08:32 GMT

சென்னை,

இயக்குனர் லெனின் பாரதி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மேற்குத் தொடர்ச்சி மலை'. நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் ராசீ.தங்கதுரை. இவர் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'தேன்' படத்துக்கும் வசனம் எழுதியிருந்தார். இந்த இரண்டு படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களிலும் ராசீ.தங்கதுரை நடித்திருந்தார்.

இந்நிலையில் ராசீ.தங்கதுரை உடல்நலக்குறைவு காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காலமானார். அவருக்கு வயது 53. அவரது மறைவுக்கு இயக்குனர் லெனின் பாரதி உள்ளிட்ட திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்