ஆய்வு செய்யாமல் எந்த பள்ளிக்கும் சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் கிடையாது - மத்திய மந்திரி உறுதி

ஆய்வு செய்யாமல் எந்த பள்ளிக்கும் சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் வழங்க மாட்டோம் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-17 21:00 GMT
புதுடெல்லி,

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சத்யபால் சிங் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்தபோது கூறியதாவது:-

ஆய்வு குழுவின் ஆய்வு இல்லாமல், எந்த பள்ளிக்கும் சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் வழங்க மாட்டோம். அந்த ஆய்வுக்குழுவில் 2 பேருக்கு குறையாமல் இருப்பார்கள். ஒருவர் கல்வியாளராக இருப்பார்.

கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் தகுதி உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்த பிறகுதான் சி.பி.எஸ்.இ. இணைப்பு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்