மலைக்கிராம மக்களுக்காக ஆற்றை கடந்து கொரோனா தடுப்பூசி கொண்டு சென்ற சுகாதாரத்துறை ஊழியர்கள்
காஷ்மீரின் மலைக்கிராமத்தில் வசிப்பவர்களுக்காக சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆற்றில் இறங்கி அதை கடந்து கொரோனா தடுப்பூசி கொண்டு சென்றனர்.;
ஸ்ரீநகர்,
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை, போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு சேர்த்து வருகின்றனர்.
அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ரஜோரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்திற்கு ஆற்றை கடந்து 2 பெண்கள் உள்பட 3 சுகாதார ஊழியர்கள் நேற்று கொரோனா தடுப்பூசி கொண்டு சென்றனர்.
மலைப்பகுதியில் உள்ள அந்த கிராமத்தை அடைய ஆற்றில் இறங்கி அதை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் 3 பேரும் வேகமாக பாயும் ஆற்றில் இறங்கி அதை கடந்து பாதுகாப்பாக மலைக்கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள மக்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
#WATCH Health workers cross a river to reach a remote area of Kandi block in Rajouri to conduct COVID19 vaccination drive#JammuAndKashmirpic.twitter.com/9x2CH6ogb6
— ANI (@ANI) June 4, 2021