உத்தரபிரதேசத்தில் டிராக்டர்-லாரி மோதல்; பக்தர்கள் 4 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் சீத்தாப்பூர் மாவட்டத்தில் உள்ள பாகுலபாரா கிராமத்தைச் சேர்ந்த சிலர், பாரபங்கியில் அமைந்திருக்கும் மாஜிதா நாக தேவதா கோவிலுக்கு டிராக்டர் டிரெய்லரில் நேற்று முன்தினம் இரவு சென்றனர்.

Update: 2021-07-24 20:31 GMT
அப்போது டிராக்டரும், ஒரு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில், டிராக்டர் டிரெய்லரில் பயணித்த பக்தர்கள் 4 பேர் இறந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் இறந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்