மாநிலங்களவையில் கடும் அமளியால் 3 வாரங்களில் 78 மணி நேரத்தில் 60 மணி நேரம் வீண்
மாநிலங்களவையில் 3 வாரங்களில் 78 மணி நேரத்தில் 60 மணி நேரம் அமளி காரணமாக வீணாகியுள்ளது.;

புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 14-வது நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது முதலே பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்கக்கோரி இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளி நிலவுவதால், ஆகஸ்ட் 9-ம்தேதி காலை 11 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், மாநிலங்களவையில் 3 வாரங்களில் 78 மணி நேரத்தில் 60 மணி நேரம் அமளி காரணமாக வீணாகியுள்ளது என்றும், 3-வது வாரத்தில் நிறைவேற்றபப்ட்டுள்ள 8 மசோதாக்கள் மீது 17 கட்சிகளின் 68 எம்பிக்கள் பேசி உள்ளனர் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.