கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை: கழிமுக கால்வாயில் குதித்து பெண் தற்கொலை - கணவர் மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் பகுதியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் கழிமுக கால்வாயில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-04 18:45 GMT

தானே, 

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண், கடந்த ஆண்டு 32 வயது வாலிபருடன் திருமணமாகி தானே மாவட்டம் பிவண்டி நகரத்தில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக இளம்பெண்ணின் கணவர் உனது தந்தை வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு மனைவிக்கு தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அப்பெண் கடும் மனஉளைச்சல் அடைந்தார். கடந்த 1-ந்தேதி பிவண்டி குண்டவாலி கிராமத்திற்கு சென்ற அப்பெண், அங்குள்ள கழிமுக கால்வாயில் குதி்த்து விட்டார். இதுபற்றி அறிந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று கால்வாயில் குதித்த பெண்ணை தேடினர். வெகுநேரம் தேடலுக்கு பிறகு அப்பெண் பிணமாக மீட்கப்பட்டார். கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் அப்பெண்ணின் கணவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்