தானேயில் முதியவரை அடித்து கொலை செய்த தம்பதி கைது

முதியவரை அடித்து கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-05 18:45 GMT

தானே, 

முதியவரை அடித்து கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

தகராறு

தானே மாவட்டம் திவா பகுதியில் உள்ள மும்ராதேவி காலனியில் வசித்து வந்தவர் அபிமன்யு பாட்டீல் (வயது65). அதே பகுதியை சேர்ந்தவர் முகமது கான் (25). இவர் சம்பவத்தன்று அபிமன்யு பாட்டீலுக்கு சொந்தமான பொருள் வைக்கும் குடோனை பயன்படுத்தி உள்ளார்.

இதை பார்த்து அபிமன்யு பாட்டீல் சத்தம் போட்டார். இதன் காரணமாக அபிமன்யு பாட்டீலும், வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அடித்து கொலை

இதையடுத்து அவரை வாலிபரும், அவரது மனைவி ரேஷ்மாவும் சேர்ந்து தாக்கினர். இதில் காயமடைந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது கான், அவரது மனைவி ரேஷ்மா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்