சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்;
மும்பை,
நவிமும்பையை சேர்ந்தவர் பிண்டு ராஜ்பர்(வயது37). தொழிலாளியான இவர் கடந்த 6-ந் தேதி இரவு அங்கு விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமியை கடத்தி சென்றார். மறைவான இடத்திற்கு சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி அறிந்த பெற்றோர் கலம்பொலி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி பிண்டு ராஜ்பரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.