மும்பை கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம் - 'இந்தியா' கூட்டணியில் குழப்பம் இல்லை; சரத்பவார் விளக்கம்

‘இந்தியா’ கூட்டணியில் குழப்பம் இல்லை, மும்பை கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம் என சரத்பவார் கூறியுள்ளார்

Update: 2023-08-14 19:45 GMT

மும்பை, 

தேசியவாத காங்கிரசை உடைத்து பா.ஜனதா கூட்டணிக்கு தாவிய அஜித்பவாருடன் சரத்பவாரின் சந்திப்பு அடிக்கடி நடந்து வருவதை எதிர்க்கட்சிகள் கண்டித்து உள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:- எனது உறவினர் அஜித்பவாரை நான் புனேயில் சந்தித்து பேசியதால் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. மராட்டிய அளவில் நாங்கள் அமைத்துள்ள 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி மும்பையில் நடைபெற உள்ள 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தும். நாங்கள் ஒன்றுப்பட்டு உள்ளோம். ஊடகங்கள் தான் அதிக குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. மும்பையில் நடைபெறும் 'இந்தியா' கூட்டணி கூட்டத்தை நடத்தும் பொறுப்பு உத்தவ் தாக்கரே, நானா படோலே மற்றும் எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்