கர்நாடகத்தில் இருந்து காரில் ரூ.2 கோடி தங்கம் கடத்தி வந்தவர் கைது

கர்நாடகத்தில் இருந்து மும்பைக்கு காரில் ரூ.2 கோடி தங்கம் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-12 19:30 GMT

மும்பை, 

கர்நாடகத்தில் இருந்து மும்பைக்கு காரில் ரூ.2 கோடி தங்கம் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தங்கம் கடத்தல்

கர்நாடகா மாநிலத்தில் இருந்து மும்பைக்கு தங்கம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் மும்பைக்கு வரும் வாகனங்களை கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த காரை போலீசார் வழிமறித்தனர். இதில் காரை ஓட்டி வந்த சந்தோஷ் சேத் (வயது33) என்பவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து காரில் அதிகாரிகள் சோதனை போட்டனர். இந்த சோதனையில் காரில் 3½ கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 7 லட்சம் ஆகும்.

கைது

இதையடுத்து போலீசார் சந்தோஷ் சேத்தை கைது செய்தனர். தங்கம் தொடர்பாக நடத்திய விசாரணையில், கர்நாடகாவை சேர்ந்த நிகில் ராய்கர் என்பவரிடம் இருந்து தங்கத்தை பெற்று மும்பைக்கு கடத்தி கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்