10,008 தீபம் ஏற்றி வழிபாடு

களக்காடு கோவிலில் 10,008 தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

Update: 2023-04-14 20:30 GMT

களக்காடு:

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, உழவார குழுவினர் சார்பில் 10,008 தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை திருப்பள்ளி எழுச்சியும், சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளினர். அதன் பின்னர் விசேஷ தீபாராதனைகளுக்கு பின் 10,008 தீபங்கள் ஏற்றப்பட்டது. கோவில் சன்னதிகள், மண்டபங்கள், சுற்றுப்புற சுவர்கள் மற்றும் கோவில் வளாகங்களில் அமைக்கப்பட்டிருந்த விளக்குகளில் பெண்கள் தீபங்கள் ஏற்றினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்