கள் விற்ற 2 பேர் கைது

கள் விற்ற 2 பேர் கைது;

Update:2023-01-21 00:15 IST

நெகமம்

நெகமத்தை அடுத்த ஆவலப்பம்பட்டி பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது ஆவலப்பம்பட்டி மேற்கு தோட்டத்தில் சிவசாமி(வயது 44) என்பவர் கள் இறக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்த போலீசார், 10 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் தோட்டத்தில் கள் இறக்கி விற்ற சேனாதிபதி(45) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்