அரவைக்காக 2,000 டன் நெல்

நீடாமங்கலத்தில் இருந்து தென்காசிக்கு அரவைக்காக 2,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-03-05 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் இருந்து தென்காசிக்கு அரவைக்காக 2,000 டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 158 லாரிகளில் நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.இதனைத் தொடர்ந்து நெல மூட்டைகளுடன் சரக்கு ரெயில் தென்காசிக்கு புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்