தஞ்சை வல்லம் பகுதியில் அரசு பேருந்தும், மினி லாரியும் மோதி விபத்து 8 பேர் உயிரிழப்பு
தஞ்சை வல்லம் பகுதியில் அரசு பேருந்தும், மினி லாரியும் மோதி விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
திருச்சி வல்லம் பகுதியில் அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் அரசு பஸ் டிரைவர், மற்றும் மினி லாரி டிரைவர் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அரசு பேருந்தில் 60 பேர் பயணம் செய்தாகவும், இவர்களில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.