தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

Update: 2018-04-22 19:15 GMT
சென்னை, 

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–

வளிமண்டலத்தில் நிலவி வரும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் மாலை நேரத்தில் வீசும் காற்றின் தன்மை அதிகமாக காணப்படும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டமாகவே காணப்படும். அதிகபட்சமாக 37 செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்சம் 28 செல்சியஸ் வரையிலும் வெப்பம் நிலவ கூடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி, சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிகபட்சமாக 1 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.


மேலும் செய்திகள்