குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை: மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை -அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை, குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை குறித்த கேள்விக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். #VijayaBaskar #GutkhaScam

Update: 2018-04-26 09:11 GMT
சென்னை

சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுகாதாரத்துறையில் வெளிப்படை தன்மையுடன் பணி நியமனங்கள் நடைபெறுகின்றன என்றும், காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். 

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களை நோக்கி அவதூறுகள், குற்றச்சாட்டுகள் வருவது இயல்பு மேலும் மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை என்று குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை குறித்த கேள்விக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார் 

மேலும் செய்திகள்