தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியீடப்பட்டுள்ளது.

Update: 2020-08-16 13:45 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,38,055 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 6,019 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,78,270 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 54,019 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,754 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

அரியலூர் - 77

செங்கல்பட்டு - 436

சென்னை -1,196

கோவை - 395

கடலூர் - 184

தர்மபுரி - 17

திண்டுக்கல் - 108

ஈரோடு -97

கள்ளக்குறிச்சி - 71

காஞ்சிபுரம் - 307

கன்னியாகுமரி - 133

கரூர் - 30

கிருஷ்ணகிரி - 48

மதுரை - 120

நாகை - 66

நாமக்கல் - 42

நீலகிரி -24

பெரம்பலூர் -42

புதுக்கோட்டை - 187

ராமநாதபுரம் - 58

ராணிப்பேட்டை - 152

சேலம் - 169

சிவகங்கை - 54

தென்காசி - 86

தஞ்சை - 124

தேனி - 205

திருப்பத்தூர் - 12

திருவள்ளூர் - 488

திருவண்ணாமலை - 94

திருவாரூர் - 65

தூத்துக்குடி - 94

திருநெல்வேலி - 130

திருப்பூர் - 34

திருச்சி - 104

வேலூர் - 264

விழுப்புரம் - 129

விருதுநகர் - 76 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்