தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியீடு
தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியீடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,38,055 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6,019 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,78,270 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 54,019 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,754 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-
அரியலூர் - 77
செங்கல்பட்டு - 436
சென்னை -1,196
கோவை - 395
கடலூர் - 184
தர்மபுரி - 17
திண்டுக்கல் - 108
ஈரோடு -97
கள்ளக்குறிச்சி - 71
காஞ்சிபுரம் - 307
கன்னியாகுமரி - 133
கரூர் - 30
கிருஷ்ணகிரி - 48
மதுரை - 120
நாகை - 66
நாமக்கல் - 42
நீலகிரி -24
பெரம்பலூர் -42
புதுக்கோட்டை - 187
ராமநாதபுரம் - 58
ராணிப்பேட்டை - 152
சேலம் - 169
சிவகங்கை - 54
தென்காசி - 86
தஞ்சை - 124
தேனி - 205
திருப்பத்தூர் - 12
திருவள்ளூர் - 488
திருவண்ணாமலை - 94
திருவாரூர் - 65
தூத்துக்குடி - 94
திருநெல்வேலி - 130
திருப்பூர் - 34
திருச்சி - 104
வேலூர் - 264
விழுப்புரம் - 129
விருதுநகர் - 76 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.