தமிழகத்தில் மேலும் 1,303 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-10-11 14:41 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த  24 மணி நேரத்தில் 1,303 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

 “ தமிழகத்தில் மேலும் 1,303- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 79 ஆயிரத்து 568- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து  மேலும் 1,428- பேர் குணம் அடைந்துள்ளனர். 

தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றைக் கண்டறிய இதுவரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 836- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  கொரோனா தொற்று பாதிப்புடன் 15,992- பேர் சிகிச்சையில் உள்ளனர். 

மேலும் செய்திகள்