பெற்றோர் பைக் வாங்கித் தராததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!

செங்கல்பட்டு அருகே பெற்றோர் பைக் வாங்கித் தராததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-30 14:20 GMT
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 19), இவர் செங்கல்பட்டு அருகே உள்ள ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் பெற்றோரிடம் பைக் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். தற்போது குடும்ப சூழ்நிலை பெற்றோர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சதீஷ் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்