தமிழகத்தில் 32 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 32 போலீஸ் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழகத்தில் 32 போலீஸ் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே 24 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 32 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,
- கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வி.சசிமோகன், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக நியமனம்
- திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், சென்னை ஐகோர்ட்டு வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு காவல் கண்காணிப்பாளர்/காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெனரலாக நியமனம்
- மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன், ஆவடி காவல் ஆணையரகத்தின் தலைமையகம் மற்றும் நிர்வாக துணை ஆணையராக நியமனம்
- ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ஜெயலட்சுமி, மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக நியமனம்
- கோவை மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பத்ரி நாராயணன், கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம்
- சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ஈஸ்வரன், சென்னை ரெயில்வே எஸ்.பி.யாக நியமனம்
- ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக இருந்த ராஜன், திருச்சி ரெயில்வே எஸ்.பி.யாக நியமனம்,
- சென்னை ரெயில்வே எஸ்.பி.யாக இருந்த அன்பு, ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்
- மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாக இருந்த வனிதா, மதுரை நகர போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்
- திருப்பூர் வடக்கு சட்டம், ஒழுங்கு துணை ஆணையராக சுஜாதா நியமனம்,
மேலும் அதன் விவரம் வருமாறு:-