பெண்ணிடம் 4¾ பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 4¾ பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-11-09 19:58 GMT

திருச்சி உறையூர் தியாகராய நகர் பகுதியை சோ்ந்தவர் வாசுகி(வயது 52). இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளில் உறையூர் நாச்சியார் கோவில் பஸ்நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 4¾ பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து வாசுகி கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்