தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை

மானாம்பள்ளி அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-05-23 00:30 IST

வால்பாறை

மானாம்பள்ளி அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சிறுத்தை

வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட சேக்கல்முடி எஸ்டேட் கீழ் பிரிவு 11-ம் ெநம்பர் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட வனச்சரகர் மணிகண்டன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் மற்றும் துணை கள இயக்குனருக்கு தகவல் கொடுத்தார். அவர்களின் உத்தரவின் பேரில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் இறந்து கிடந்த சிறுத்தைப்புலியின் உடலை மீட்டு உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் உள்ள வனத்துறையினரின் குடியிருப்பு வளாகத்திற்கு கொண்டு வந்தனர்.

தொண்டையில் காயம்

அங்கு வைத்து உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையிலும், வனச்சரகர் மணிகண்டன், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதி கணேஷ் ரகுராம் முன்னிலையிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயராகவன் சிறுத்தைப்புலியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தார்.

அப்போது, இறந்த பெண் சிறுத்தைப்புலிக்கு 3 வயது இருக்கும். அதன் தொண்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மூச்சுக்குழாய் சிதைந்து போனதால் இறந்து உள்ளது. சிறுத்தைப்புலியின் உடல் பாகங்களை ஆய்வக பரிசோதனைக்காக எடுத்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் சிறுத்தைப்புலியின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் சிறுத்தைப்புலி இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்