கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-07 18:57 GMT

நெல்லை மேலப்பாளையம் அஸ்லான் தெருவை சேர்ந்தவர் பைசல் (வயது 38). இவர் மேலப்பாளையம் மற்றும் பெருமாள்புரம் போலீஸ் நிலைய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கோர்ட்டில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்த இவர் நீண்ட நாட்களாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தலைமறைவாக இருந்த பைசலை கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லை கோர்ட்டில் ஆஜர்்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்