கார் மோதி முதியவர் சாவு

Update: 2023-03-16 19:00 GMT

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி அருகே உள்ள போலுப்பள்ளியை சேர்ந்தவர் இளம்பிள்ளை (வயது 76). இவர் கடந்த 12-ந் தேதி மாலை போலுப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் இளம்பிள்ளை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இளம்பிள்ளையை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பிள்ளை இறந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்