முதியவர் மீது தாக்குதல்; ஒருவர் கைது
முதியவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்;
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேது (வயது 65). இவருக்கும், உறவினரான சுப்பிரமணியனுக்கும் (48) சொத்து சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணியன் மற்றும் சிலர் சேது வீட்டுக்கு சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணியன், பாண்டிச்செல்வி, அய்யங்காளை, சுரேஷ், பாண்டி ஆகியோர் மீது எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.