பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை போட்டிகள்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை போட்டிகள் நடந்தன.

Update: 2022-12-24 18:42 GMT

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நேற்று நடந்தன. மாணவ-மாணவிகளுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடந்த கலை போட்டிகளில் 5 முதல் 8 வயது வரை, 9 முதல் 12 வயது வரை, 13 முதல் 16 வயது வரை என தனித்தனியாக பரத நாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை), குரலிசை, ஓவியம் ஆகிய போட்டிகள் நேற்று நடந்தன. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 276 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முன்னதாக போட்டிகளை திருச்சி மண்டல தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் உதவி இயக்குனர் நீலமேகம் பார்வையிட்டு, போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை ஜவகர் சிறுவர் மன்றத்தின் மாவட்ட திட்ட அலுவலர் நடராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர். போட்டிகளில் முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்