ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

கடையநல்லூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.;

Update:2023-05-18 00:30 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் மகன் வினோத் (வயது 28). ஆட்டோ டிரைவரான இவர் ஊரில் இருந்து கடையநல்லூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய வினோத் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்