பா.ஜனதா செயற்குழு கூட்டம்

சங்கரன்கோவிலில் பா.ஜனதா நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-16 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் உள்ள மண்டபத்தில் பா.ஜனதா நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் மகாராஜன், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நகரத் துணைத் தலைவர் கனி வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும். சங்கரன்கோவில் நகரில் நோய் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் வெங்கடேஸ்வர பெருமாள், இளைஞர் அணி துணைத் தலைவர் அந்தோணி ராஜ், பிரசார பிரிவு துணைத் தலைவர் ரவி பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர்கள் வீரபுத்திரன், சங்கரலிங்கம், நகரச் செயலாளர்கள் மாரிமுத்து, காளிமுத்து, அருண், இளைஞரணி விக்னேஷ், விவசாய அணி நாகராஜ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சங்கர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்