உலக தாய்மொழி தினம் கொண்டாட்டம்

முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாட்டப்பட்டது.;

Update:2023-02-21 14:32 IST

ஆரணி

ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் சீ.தனஞ்செழியன் தலைமை தாங்கினார்.

தமிழாசிரியை கலைச்செல்வி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் இணைந்து தமிழ் என்ற வார்த்தையை உருவாக்கி அழகு சேர்த்தனர்.

மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் உருவ வேடம் அணிந்து அவர்களின் சிறப்புகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வள்ளி, ராஜா, சங்கமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமைஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்