தேங்காய் ஏலம்

பரமத்திவேலூரில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

Update: 2022-12-27 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடப்பது வழக்கம். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 1,910 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.27-க்கும், குறைந்தபட்சமாக ரூ.15-க்கும், சராசரியாக ரூ.25.10-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.44 ஆயிரத்து 893-க்கு விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 727 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.25.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21-க்கும், சராசரியாக ரூ.23-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16 ஆயிரத்து 710-க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்